Top News

இதயதெய்வம் அப்துல்கலாம் சமுகசேவையாளர் நற்பணி மன்றத்தினரால் மலைவாழ் மக்களுக்கு உணவுபொருள் வழங்கப்பட்டது

சென்னை, 15.04.2020 இன்று தாம்பரம் அடுத்துள்ள அகரம்தென், சத்திய நகர் மற்றும் கோவிலஞ்சேரிஆகிய இடங்களில்வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களான இருளர் இன மக்கள் உணவின்றி தவித்து வருவதை அறிந்த பள்ளிக்கரணையை சேர்ந்த ராஜா என்பவர் தலமையில்,இதய தெய்வம்” அப்துல் கலாம் சமூக சேவையாளர் மன்றத்தினர், செங்கல் பட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களின்அனுமதியின் பேரில் சமந்தபட்ட தாம்பரம் வட்டாச்சியர் திரு. சரவணன் அவர்களோடு இணைந்து ஒரு வாரத்திற்க்கு உண்டான அரசி உட்பட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் இது போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட அங்குள்ள அடுத்த பகுதியில் உள்ளவர்களையும்கணக்கெடுக்கபட்டது.


இது குறித்து தாம்பரம் வட்டாச்சியர்பேசியபோது, சமூக ஆர்வலர்களை ஊக்கமளிக்கும் விதமாக சமூக ஆர்வலர்களிடம், இது போன்று தொடர்ந்து பாதிகப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும்சமூக பணி செய்து அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியில் தொடர்ந்து உதவிசெய்திடுமாறு கேட்டுக்கொண்டார் ,


சமூக ஆர்வலர்கள் அதன்படி தொடர்ந்து மக்கள் பணி செய்வோம் என உறுதி அளித்தனர், அப்போதுஉடனிருந்தவர்கள்அமைப்பின் தலைவர்முனைவர் வாஞ்சிநாதன், மற்றும் நிர்வாகிகள் ராஜா,செல்வாபிரியன், அமல்ராஜ்,ரவி, மகேஷ், குமரேசன், மணி மற்றும் கிராம ஆய்வாளரும்,இரு கிராம நிர்வாக அலுவலர்களும்மக்கள் பணியில் ஈடுபட்டனர்


Post a Comment

புதியது பழையவை