ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ(ISRO) கடந்த மாதம் ஜூலை 14ம் தேதி விண்ணில் ஏவியது.
இந்த சந்திரயான் 3 சர்வதேச சந்திர தினத்தில் (21 ஜூலை 2023) சந்திரனுக்கு மிக அருகிலும், தற்போது சந்திராயன் 3 விண்கலம் ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவு 12.05 மணி முதல் பூமியின் வட்டப் பாதையை நிறைவு செய்து நிலவின் வட்டப் பாதைக்குள் வெற்றிகரமாக பயணிக்க தொடங்கியது என்று ஆகஸ்ட் 4ம் தேதி இஸ்ரோ தெரிவித்தது.
மேலும், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையம் சந்திரயான் 3 (Chandrayaan3) விண்கலத்தை திட்டமிடப்பட்ட வட்டப்பாதையில் நீட்டிக்க வைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 5ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்றுவட்டபாதையில் செருகப்பட்ட போது எடுத்த புகைப்படங்களை காணொளியாக இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
இதில் நிலவின் மேற்பரப்பு மிகவும் தெளிவாக தெரிவதை பார்க்க முடிகிறது, சுமார் ரூ. 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறக்கப்பட உள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக